Wednesday, October 31, 2012

கடவுளின் காமலீலை - சூரியன்

சூரியனின் மனைவியின் பெயர் சஞ்ஞிகை. இவள் சூரியனின் தேகத்தின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் நீங்காத துக்கத்தில் ஆழ்ந்தாள். இவர்களுக்கு பிரஜாபதி மற்றும் யமனும் யமுனை என்னும் இரட்டைப் பெண்குழந்தைகள் உண்டு.

ஒருமுறை சஞ்ஞிகை தன் தந்தையை காணும் பொருட்டு செல்லும் போது தன்னைப் போல இன்னொரு பெண்ணை உருவாக்கி சாயாதேவி என்று பெயரிட்டாள்.

கிளம்பும் போது சாயதேவியிடம் தன் கணவனுக்கு சந்தேகம் வராதபடி எல்லா சுகத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் தன் குழந்தைகளையும் பேணிகாக்க  வேண்டும் எனவும் வேண்டினாள். சாயாதேவியும் சரி என் ஏற்றுக் கொண்டாள். 

இருந்தாலும் சக்களத்தி என்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் துன்புறுத்தினாள். இதேவேளை கணவனிடம் சொல்லாமல் வந்த மகளை நீ ஒரு பெண் குதிரையாக கடவாய் என சாபமிட்டு அனுப்பினான் சஞ்ஞிகையின் தந்தை.

மூத்தவள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை காணமுடியாத யமன் கோபித்து அவளை காலால் உதைக்க அதற்கு சாயதேவி உன் கால் புழுக்கக் கடவது என சாபமிட்டாள். யமன் இதை தனது தந்தை சூரியனிடம் தெரிவித்தான். தாயின் சாபம் நீக்கலாகாது எனக்கூறி சாயாதேவியிடம் காரணம் கேட்க அவள் தன் சுயரூபம் பற்றி சொன்னாள்.

இதைக்கண்டு கோபமுற்ற சூரியன்  சஞ்ஞிகையின் தந்தையிடம் முறையிட்டான். அவர் அமைதிகொண்டால் தக்க யோசனை கூறுவதாக சொல்ல அதற்கு சம்மதித்தான்.  உனது தேக வெப்பம் தாங்க முடியாததால் அவள் இங்கு வர என்னால் குதிரை உருவம் கொண்டு உத்திரகுரு காட்டில் இருக்கிறாள் என்றான்.

சூரியனையும் தேக வெப்பத்தை குறைத்து கூடி மகிழ வசதியாக உருவம் பெற்று பின் அவனும் குதிரை உருவம் கொண்டு சஞ்ஞிகையுடன் கூடி வாழ்ந்தான். அப்போது மூக்கின் வழியே வீரியம் வெளிப்பட்டு அதனால் அஸ்வினி தேவதைகள் பிறந்தனர். (பிரம புராணம்)

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 722 - 723.

Tuesday, October 30, 2012

சலந்தரன்

இவன் சிவபெருமானைப் போல் உருவம் கொண்டு பார்வதியை அடைய முற்பட்டான். பார்வதி தேவி இவனது வேஷத்தை தோழிகள் மூலம் கண்டுகொண்டதால் மறைந்து கொண்டாள்.

பின் இவன் சிவனுடன் யுத்தம் செய்யும் போது தன் மாயா சக்தியால் பார்வதியாரைபோல் மாயையால் மாயா பார்வதி உருவம் கொண்டு எதிரில் கொலைசெய்து பின் சிவனால் கொல்லப்பட்டான்.

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 603.

கடவுளின் காமலீலை - இந்திரன்


1. கெளதமர் மனைவியான அகலிகையின் மேல் ஆசை கொண்டான் இந்திரன். எப்படியும் அவளை அடையவேண்டும் என ஒரு திட்டம் தீட்டினான். கெளதமர் தினமும் கங்கா ஸ்நாநத்திற்கு செல்வார் என்பதை அறிந்து கோழி கூவிவது போல் கூவினான். அதைக் கேட்டு எழுந்த கெளதமர் வீட்டை விட்டு கிளம்பினார். இந்த வேளையில் இந்திரன் கெளதமரைப் போல் உருவம் கொண்டு அவளுடன் புணர்ச்சியில் ஈடுபட்டான். அகலிகையும் இவன் தன் கணவன் அல்ல என்பதை அறிந்து கொண்டாலும் தன் அழகில் கர்வம் கொண்டவளாய் புணர சம்மதிக்கிறாள்.

கெளதமர் வருவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்த இந்திரன் மாட்டிக் கொண்டான். இருவரையும் பார்த்த கெளதமர் இந்திரனுக்கு ஆண்மையை இழக்குமாறும் பெண்களுக்குண்டான அநெக குறிகள் உடம்பு முழுவதும் வரவும், அகலிகைக்கும் காற்றை மட்டும் உணவாகக் கொண்டு, புழுதியோடு புழுதியாக கேட்பாரற்று கிடக்க வேண்டும் எனவும் ராமன் வந்து உனக்கு சாபவிமோசனம் தருவான் எனவும் சாபமிட்டார்.

தன் உடல் முழுவதும் பெண் குறிகளாகப் பெற்ற இந்திரன் நாணமடைந்து தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மற்றவருக்கு கண்களாகவும் இந்திரனுக்கு பெண்குறிகளாகவும் தரப்பெற்று தன்னுலகடைந்தவன். (இராமாயணம்)

2. தேவசன்மன் மனைவியாகிய உரிசையை அடைய இந்திரன் ஆசைப்பட்டான். ஒரு நாள் முனிவர் வெளியே செல்லும்போது விபுலன் என்ற சீடனிடம் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

முனிவர் இல்லையென்று அறிந்த இந்திரன் அவளை அடைய வந்தான். ஆசை வார்த்தைகள் பேசி தன் வசம் இழுக்கப் பார்த்தான். இதைக்கண்ட விபுலன் இந்திரனைக் கண்டித்தான். பின் இந்திரன் தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி வெளியேறினான்.

3. ஒருமுறை சலந்திரன் ஒரு பெண்ணிடம் ஆசை கொண்டான். அதே பெண்ணிடத்தில் இந்திரனும் ஆசை கொண்டு இருவரும் கடலில் குதித்து தேடினார்கள்.

4. அரம்பையர்கள் என்பது 60 ஆயிரம் பெண்டள் உள்ள தேவலோகம். அங்கே இந்திரன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வந்தார். அவரை வணங்கி இங்கிருக்கும் பெண்களில் உங்களுக்கு பணிவிடை செய்ய யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். நாரதர் வபு என்ற பெண்ணை தெர்ந்தெடுக்க அவளை அவருடன் அனுப்பி வைத்தான்.

5. இந்திரன் நளாயினி மேல் ஆசை கொண்டு அவளை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே சிவனைக் கண்டு தன் வச்சிராயுத்தால் ஓங்கி தாக்க முற்பட்டான். அப்போது சிவன் திரும்பிப் பார்க்க அதனால் இந்திரன் கையும், வலது தோளும் வாதமுற்று துக்கமடைந்தவன்.

6. இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இந்திரனைக் கண்டு என்னால் தான் உனக்கு இந்த போகம் வந்தது எனக் கூறினாள். அதைக்கேட்ட இந்திரன் கோபமுற்று நீ பூமியில் பெண்ணாக பிறப்பாய் என சாபமிட்டான். அதற்கு இந்திராணி நீயும் இந்த பூமியில் ஆணாக பிறப்பாய் என சாபமிட்டாள்.

பின் இருவரும் புண்ணியகீர்த்தி என்பவற்கு புத்திரன், புத்திரியாக பிறந்தனர்.

7. பாரிசாதன் மனைவி வபுஷ்டமை அடைய இந்திரன் ஆசை கொண்டான். பலவகையிலும் அடைய முற்பட்டு தோல்வி கண்டான். ஒருமுறை பாரிசாதன் அசுவமேத யாகம் செய்ய முற்பட்டான். அசுவமேத யாகம் என்பது யாக குதிரையை யாகம் நடத்துவரின் மனைவியுடன் புணரவைப்பது.

இதைக் கேள்விப்பட்ட இந்திரன் குதிரையின் உடலுக்குள் புகுந்து கொண்டான். யாக முறைப்படி குதிரை வபுஷ்டமையுடன் புணர இந்திரன் திருப்தி கொண்டான். இதனால் அசுவமேத யாகம் செயலிழந்து போனது. (சிவமகா புராணம்)

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 154-159.

சராசந்தன்

இவன் யார் ? மகத தேசத்தின் அதிபதியான பிருகத்ரதன் மகன்.  இந்த பிருகத்ரதன் ரொம்ப நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்த வேளையில் சண்டஹௌசிக முனிவரை வேண்டினான். அப்போது தவத்திலிருந்த முனிவர் ஒரு மாம்பழம் கொடுத்து பிருகத்ரதன் மனைவியை உண்ணச் சொன்னார். அதையே மன்னனும் செய்ய, பிருகத்ரதன் மனைவியோ தன் சக்களத்திக்கும் பாதி மாம்பழம் கொடுத்தாள். இதனால் இருவருக்கும் பாதி உருவமோடு பிள்ளைகள் பிறந்தனர். இதனைக் கண்ட மன்னன் இருவரையும் ஊருக்கு வெளியே தூக்கிவீச உத்தரவிட்டான். அதன் படியே தோழியரும் செய்தனர்.

அந்த ஊரைக் காக்கும் அரக்கி சரை என்பவள் பாதி உருவம் கொண்ட குழந்தைகளை எடுத்து இணைத்து ஒரு உருவமாக்கினாள். அது உயிர் பெற்று அழத்தொடங்கியது. இதைக்கேட்ட மன்னன் அக்குழந்தையை சரையிடமிருந்து பெற்று சராசந்தன் எனப் பெயரிட்டு வளர்த்தான்.

இவன் வளர்ந்தவுடன் கிருஷ்ணனுடன் பலமுறை போர்தொடுத்து வெற்றி பெற்றுருக்கிறான். ஒருமுறை கதாயுதத்தை சுழற்றி எறிந்து கிருஷ்ணனது பாதி நாட்டை கைப்பற்றினான்.

இன்னொருமுறை இராமகிருஷ்ணருடன் போர்தொடுக்க அவர்களை எதிர்கொண்டு விரட்டினான். அவர்களும் கோமந்தபருவத்தில் ஒளிந்தனர். தேடித்தேடி அலுத்துப் போய் அருகில் உள்ள மலையைக் கொளுத்தினான். இதையறியாத இருவரும் வெளியே வர வெட்கத்துடன் தன் படைவீரர்களை எல்லாம் இழந்து திரும்பிச் சென்றனர்.

இவனிடம் கண்ணன், பீமன் மற்றும் அருச்சுணன் மூவரும் வேதியர் உருவம் எடுத்து யுத்தபிச்சை யாசித்தனர். அதற்கு இணைந்து பீமனுடன் மல்யுத்தம் செய்கையில் கண்ணன் புல்லைப் பிளந்து பீமனறிய இருபுறம் எறிந்தான். அந்த குறிப்பை உணர்ந்த பீமன் அவன் காலைகிழித்து இருபுறம் எறிந்து கொன்றான்.

அபிதான சிந்தாமணி பக்கம் 599.

Friday, October 26, 2012

ஆரியர்

வட நாட்டிலிருந்து பாரத கண்டத்தில் வந்து சரஸ்வதி நதியின் அருகில் வசித்தவர்கள்.

அபிதான சிந்தாமணி பக்கம் 137.

திராவிடம்

தமிழருக்கு ஆரியர்கள் சூட்டிய பெயர் தான் திராவிடம். இது ஒரு தேசத்தை குறிக்கிறது. - அபிதான சிந்தாமணி பக்கம் 823.

கி. பி 820 ல் வாழ்ந்த சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற சங்கராச்சார்யா திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை அழைக்கிறார்.


To Dr. Caldwell is due a further extension of the meaning of the term Dravida. When the comparative study of the South Indian languages was first started by him, the glossarial and grammatical affinities between them were so marked as to lead him to the conclusion that they were allied languages of the non-Aryan group. He called these languages of South India Dravidian and the people speaking them Dravidians. His extension of the word as a generic term for the South Indian group of languages is convenient and has been accepted. 

Linguistic evidence alone, however cannot be sufficient, and by itself is unreliable to establish any theory about the origins of castes or the ethnic affinity of peoples. Thus the application of the name Dravidian or Dravida to all tribes, Brahman as well as non-Brahman, inhabiting the extreme south of the Peninsula is unwarranted, inaccurate and mis-leading.


Prof.Wilson and Sir Monier-Williams give three senses in which the word is used

(1) The country in which the Tamil language is spoken;
(2) An inhabitant of the country;
(3) A class of Brah-manical tribe called the 'five Dravidas'.

In accepting the first meaning western scholars and Indian pandits seem to agree.


As regards the second, differences of opinion exist. Whether the name Dravida was applied to all the peoples living in that country or only to a particular caste or tribe remains to be settled.

The Tamil speaking non-Brahmans have always called themselves Tamilar but never Dravidas.

And the Tamil Brahmans who called themselves the mahajanam or the "greatmen" were,and even now are, known to the other Brahmans of India as Dravidas.

- "Tamil Studies of Essays on the History of the Tamil People, Lauguage, Religion and Literature"  by M. Srinivasa Aiyangar M.A. 1914.



The Dravidians are divided into different peoples, by diferent languages, as widely different from each other as German, French and English.

The most important of these Dravidian races is that of the Tamulians. They occupy not only the country, but also the North of Ceylon and the South of Travancore, on the western side of the ghauts. There is a Christian congregation of Tamulians at Bombay and at Calcutta; and Tamulians are to be found in, Burmah, Pegu, Singapore, and in the Islands of Mauritius, Bourbon and even in the West Indies. It is only a short time ago that I had to send Tamil gospels and tracts to Jamaica. In short, wherever money is to be earned, and wherever there is a lazier and more superstitious people to be shoved aside, there will Tamulians be found, for they are the most enterprizing and movable people in India. Their numbers according to the last census amount to 16 millions. In the land of the Tamulians there ruled in olden days many kings, but three dynasties made themselves especially remarkable : the Pandian, Chera, and Chola dynasties.


- "The Land of the Tamulians and its Missions" - Translated from german by J.D.B.GRIBBLE. 1875.

கண்ணப்ப நாயனார்.

பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர்களுக்கு அரசனாயிருந்த நாகனுக்கும் அவன் மனைவி தத்தைக்கும் குழந்தை பிறந்தது.  குழந்தையை தூக்கும் போது திண் திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயரிட்டு வளர்த்தனர்.

வாலிப வயதடைந்த திண்ணன் தன் நண்பர்கள் காடன் மற்றும் நாணனுடன் வேட்டைக்கு சென்றான். ஒரு பன்றியை தொடர்ந்து, அதை வேட்டையாடி கொன்றாகள். பின் தாகம் எடுத்தால் தண்ணீர் வேண்டும் என் எண்ணிய போது நண்பன் அறிவுரைப் படி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கு சென்றனர்.  திண்ணன் காடனிடம் பன்றியை பதப்படுத்த சொல்லிவிட்டு நாடனுடன் பக்கத்தில் இருக்கும் மலைப்பகுதிக்கு சென்றனர்.

மலையில் இருக்கும் கோவிலில் எழுந்தருளியுள்ள சீகாளத்தியப்பரை தரிசனம் செய்துவிட்டு அவருக்கு படைக்க பட்டிருக்கும் உணவையும் சூடியிருக்கும் பூக்களைப் பற்றி நண்பனிடம் இது என்ன என்று கேட்டான் திண்ணன்.

அதற்கு நாணன் உன் தந்தையும் நானும் போன முறை இங்கு வந்தோம். அப்போது ஒரு வேதியர் இவரை நீராட்டி பூக்கள் சூடி அவர் கொண்டு வந்திருந்த உணவைப் படைத்து ஊட்டக் கண்டேன்  என்றான். இங்கு எழுந்தருளியிருக்கும் சீகாளத்தியப்பருக்கு இப்படி செய்தால் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றான்.

இதைக்கேட்ட திண்ணன் நானும் அதன்படி செய்ய விருப்பப் படுகிறேன் எனச்சொல்லி மலைமீது இருந்து கீழே வந்து பதப்படுத்தி வைத்திருந்த பன்றியையும் வரும் வழியில் பூக்களையும் பறித்துக் கொண்டு வந்தான். அந்த கோவிலை முழுவதுமாக சுத்தம் செய்தான். ஆற்றில் இருந்து நீரை வாயில் எடுத்து வந்து அவரை நீராட்டி தான் கொண்டு வந்திருந்த பூக்களைச் சூடி பன்றிக் கறியை சுவாமிக்கு படைத்தான்.

நண்பர்கள் இதனை திண்ணனின் தாய் தந்தையிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து திண்ணனை வீட்டிற்கு வரச்சொல்ல அதற்கு சுவாமிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து சென்றான்.

மறுநாள் வந்த வேதியர் அங்கிருந்த மாமிச உணவைக் கண்டு அதை அப்புறப் படுத்தி மீண்டும் நீராட்டி பூச்சூட்டி தான் கொண்டு வந்திருந்த உணவை படைத்தார்.

மறுநாள் திண்ணன் வந்து வேதியர் செய்ததை அப்புறப் படுத்தி தன் வழக்கம் போல் மாமிச உணவைப் படைத்து பூச்சூடிச் சென்றான்.

வேதியர் வந்து பார்க்க சுவாமியிடம் வேண்டினான். அதற்கு சுவாமி தோன்றி உன் பூசையை முடித்துவிட்டு மறைந்திருந்து காத்திடு என்றார். அதுபோலவே வேதியரும் செய்ய திண்ணன் வந்து தன் பூசையை தொடங்கினான்.

இப்போது சுவாமி தன் ஒரு கண்ணில் இருந்து உதிரம் கொட்டச் செய்தார். அதைக் கண்ட திண்ணன் தன் கண்ணை எடுத்து சுவாமிக்குப் படைத்தான். வேதியரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது மற்றொரு கண்ணிலிருந்தும் உதிரம் கொட்டச் செய்தார். அதைக் கண்ட திண்ணன் தன் காலால் சுவாமியின் கண்ணினருகே ஊன்றிக் கொண்டு மற்றொரு கண்ணையும் பறிக்க முற்பட்டான்.

சுவாமி  உடனே கண்ணப்பா நில் உன் அன்பு கண்டு வியந்தேன் என திருவாய் மலர்ந்து தமது வலப்புறமிருக்கும் பிறவாப்பேறளித்தனர். சுவாமி வழங்கிய கண்ணப்பன் என்ற பெயர் இன்று வரை நிலைத்திருக்கிறது.

இந்த கண்ணப்பன் முன் ஜென்மத்தில் அர்ச்சுனன் என்ற பெயர் கொண்டவன்.


Thursday, October 25, 2012

சீதா பிராட்டியார்


சீதா பூர்வ ஜென்மத்தில் வேதம் ஓதிக் கொண்டிருந்த குசத்துவர் வாயில் தோன்றி வேதவதி என்ற பெயருடன் வளர்ந்து கொண்டு இருந்தாள். தம்பன் என்னும் அரக்கன் இவளை மனைவியாக்க வேண்டி இருடியைக் கேட்டான். அதற்கு இருடி இவள் விஷ்ணுவுக்கு மனைவி அதனால் அனுமதிக்க மாட்டேன் என்றாள். கோபம் கொண்ட அரக்கன் இருடியைக் கொன்றான்.

வேதவதி தனித்து விடப்பட்ட நிலையில் அவள் விஷ்ணுவை அடைவதற்க்காக அவரை நினைத்து தவம் செய்தாள்.  அங்கே வந்த இராவணன் இவளை அடைய முற்பட்டு மிக வலிமையுடன் இவள் கரம் பிடித்தான்.  உடனே வேதவதி நீ தீண்டிய இந்த உடல் இனிமேல் இருக்கக் கூடாது, உன் அரசை அழிப்பேன் என்று சாபமிட்டு தீக்குளித்தாள்.

பின் இலங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் பிறந்தாள். அங்கே பூஜைக்காக மலர்களை பறிக்க வந்த இராவணன் இக்குழந்தையை எடுத்துச் சென்றான்.  இதைக்கேட்ட சோதிடர் இக்குழந்தை இங்கு இருந்தாள் இந்த அரசை அழித்து விடுவாள் என்று சொல்ல, இராவணன் வேறுவழியில்லாமல் ஒரு பெட்டியில் வைத்து கடலில் விட்டான். அது வெள்ளத்தில் புரண்டு மிதிலையை வந்தடைந்தது. அந்த நேரத்தில் சனகன் யாகம் செய்து கலப்பையை எடுத்து உழும்போது பெட்டி தட்டுப்பட்டது. அதை திறக்க குழந்தையைக் கண்டு மகிழ்ந்தான்.

வளர்ந்த சீதையை ஒரு சுயம்வரத்தில் இராமன் வில்லை உடைத்து மணந்து கொண்டான்.

மீதிக்கதை தெரிந்ததே. அபிதான சிந்தாமணியிலிருந்து எடுத்தது. பக்கம் 673,674.

Saturday, October 20, 2012

அபிதான சிந்தாமணி - விஷ்ணு


1. சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு செல்ல அவனைத் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மச்சாவதாரம் எடுத்து சூரனைக் கொன்று வேதங்களை கைப்பற்றி பிரம்மனிடம் கொடுத்தது.

2. இரணியாக்ஷன் பூமியைச் சுருட்டிச் செல்ல விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்று பூமியை தம் கொம்பில் தாங்கி வந்து முன்போல் நிறுத்தியவர்.

3. கூர்மவதாரம் எடுத்து பாற்கடல் கடைகையில் மந்திரமசையாது நிற்கத் தம் முதுகில் தாங்கியவர்.

4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் பொருட்டுத் தேவரை வருத்தி இறுமாப் படைந்திருந்த இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள் புரிந்தவர்.

5. வாமன அவதாரத்தில் காசிபர்க்கு அதிதியிடம் அவதரித்து மகாபலியிடம் மூன்றடிமண் யாசித்து அவந்தர உலகமெல்லாம் ஈரடி மண்ணால் அளந்து ஓரடிக்கு இடம்

பெறாததால் அவன் தலையில் தன் கால் பதித்து பாதாளத்தில் அழுத்தி தேவர் பயம் போக்கியவர்.

6. புத்தாவதாரங்கொண்டு நாரதரை மாணுக்கராயுடன் கொண்டு சென்ற திரிபுராதிகளுக்குப் புத்தமதம் போதித்தவர்.

7. பரசுராமாவதாரத்தில் சமதக்னிக்குக் குமாரராய் அவதரித்து சூரிய வம்ச நாசஞ் செய்தவர்.

8. இராமாவதாரம் எடுத்து இராவண கும்பகர்ணாதியரை வதைத்து சீதையை சிறைமீட்டுத் தேவர்களின் இடுக்கண் போக்கியவர்.

9. பலராமாவதாரம் எடுத்து தேவகாசுரன் முதலிய அசுரரை வருத்திப் பயம் போக்கியவர்.



அபிதான சிந்தாமணியிலிருந்து - சிவன்



1. பிரம்ம தேவனை முகத்தினும், இந்திரனை தோளினும், ஏனையோரை மற்ற உறுப்புகளினும் படைத்தவர்.

2. பிரம்மன் கர்வம் கொண்ட நேரத்தில் பைரவனை ஏவி அவனது நடுத்தலையை கிள்ளியேறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தை கையிற் பற்றியவர்.

3. இந்திரன் ஒரு காலத்தில் கர்வம் கொள்ள பூத உருவம் எடுத்து அவன் முன் சென்று கோபித்து அவனுடைய கோபத்தை கடலில் விட்டார். அது குழந்தை உருவமானது. அவனுக்குப் பெயர் சலந்திரன்.

4. பார்வதி பிராட்டியார் தன் அழகை (திரி நேத்திரங்களை) மறைத்ததால் அவர் விரல்களில் உண்டாகி பெருகிய கங்கையைத் தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப சடையில் அணிந்து கொண்டார். இதனால் கங்காதரன் என்ப் பெயர் பெற்றார்.

5. ஒரு பிரவியில் பிரம்ம தேவன் தான் படைத்த குமரியை அடைய நினைத்தார். அதனால் அவள் மான் உருவம் எடுத்து ஓடினாள். பிரம்மனும் மானுருக் கொண்டு புணரச் சென்ற போது சிவன் பிரம்மனின் தலையைக் கிள்ளியவர்.  சிவனும் வேட உருவம் எடுத்து அம்பு எய்து கொன்றார். பின் பிரம்மன் மன்னிப்பு கேட்க உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர்.

6. அவந்தி நகரத்து வேதியன் தன்னைப் பெற்ற தாயைக் கூடித் தந்தையைக் கொலைபுரிந்த கொடியவன்.  அவன் முடிவில் நோயும் வறுமையும் மிகுந்து மதுரை நகரை அடைந்தானாக, அவன்பாலும் கூடல் நாயகனான சொக்கநாதப் பெருமான் கருணை கொண்டு அவன் மாபாதகம் தீர்த்தார்.

7. மதுரையில் பிறந்து வளர்ந்த தாருகவனத்து இருடிபத்னிகளை அவர்கள் ஆசைக்கிணங்க வளையலிட்டு மையல் கொண்டு புத்திரப் பேறும் அளித்தார்.

8. காம வேட்கை கொண்ட ஒரு வேதியன் ஒருவன் தாசி வீட்டிற்கு சென்று அவளை புணர்ந்தான். ஆனால் அவளுக்குத் தர பணமில்லாததால் சிவனை வேண்ட அதற்கிணங்கி தமது பதக்கத்தைத் தாசியிடம் செர உதவி செய்தார் சிவபெருமான்.

9. ஒருமுறை விஷ்ணுமூர்த்தி பாதாளத்திற்கு சென்று அங்குள்ள அப்சரஸ் தேவதைகளுடன் கூடி பல புத்திரர்களைப் பேற்றார். தம் காக்கும் தொழிலையும் மறந்தார். பிரமாதி தேவர்கள் சிவனை அணுகி காக்க வேண்டினர். உடனே சிவபெருமான் பாதாளம் சென்று விஷ்ணு புத்திரர்களுடன் போர் கொண்டு அவர்களை அழித்தார். பின் விஷ்ணுமூர்த்தியே போருக்கு வர அவரையும் கொன்று வைகுண்டத்திற்கு அனுப்பினார்.

பின் அப்சரஸ் தேவதைகள் பாதாளத்தில் இருப்பது கேட்டறிந்து மற்ற தேவர்களும் அவர்களை புணர ஆசைப்பட்டுச் சென்றனர். இதைக் கேட்ட சிவபெருமான் அப்படிச் சென்றவர்கள் உயிர் அழியும் என சாபமிட்டார்.   -  (சிவமகா புராணம்)

10. விஷ்ணுமூர்த்தியை பலமுறை சக்தியாக நினைத்து சக்தி உருவமாக பெற்று ஐயப்பனை பெற்றார்.

11. ஒருமுறை சிவன் தியானத்தில் இருக்கும் போது அவரது தேகத்தில் உண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாகியது.

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 658 - 664.

திசைமானி


அந்தக் காலத்தில் கடல் வழியாக சென்று வாணிகம் செய்தவர்கள் காற்று வீசும் திசையை வைத்தும், தேவாங்கை வைத்தும் பாதையை கண்டுகொள்கின்றனர்.

காலத்தை கண்டுகொள்ள அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்து வீசும் காற்றுக்கு தனியே பெயர் வைத்தனர்.

வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
கிழக்கு - கொண்டல்
மேற்கு - கோடை

பின் திசையை கண்டுகொள்ள தேவாங்கை பயன்படுத்துகின்றனர். அதை கீழே விடும்போது எப்போதும் மேற்கு நோக்கியே நிற்கும். அதற்காக அதிகமான தேவாங்கை கடல்பயணத்தில் பயன்படுத்துவர்.

கொடை, தயை, ஈகை


சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
கொடை, தயை, ஈகை
மூன்றும் குடிப்பழக்கம்

சித்திரங்கள் வரைய வரையத்தான் பழக்கத்திற்கு வரும்.
தமிழ் பேசப் பேசத்தான் நமக்கு பழக்கமாகும்
கற்கும் போது மனதால் உணர்ந்து அனுபவித்து கற்கும் பழக்கம் வேண்டும்
ஒழுக்கமாக இருக்க பழக வேண்டும்.
இந்த உலகிலேயே கொடை, தயை, ஈகை மூன்றும் தான் வழிவழியாக வரனும்.
கொடை என்பது என்ன இருந்தாலும் கொடுப்பது. பாரி முல்லைக்கு தேர் கொடுத்தது போல்.
தயை என்பது எல்லா உயிரிடத்திலும் அன்பாக இருப்பது.
ஈகை என்பது எதையும் எதிர்பாரமல் கொடுப்பது.

Friday, October 19, 2012

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பச்சை யூனியைந்த வேற்படைகள் வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழூகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

எங்கிருந்து வந்தான் இந்த பாரதி ? எப்படி அவனுக்கு இவ்வளவு தைரியம் ?
பயந்து பயந்து வாழும் மனிதரைப் பார்த்து இப்படி பாடுகிறான் பாரதி.

உந்துதல் வேண்டும்


வாழ்க்கையில் ஒரு உந்துதல் வேண்டும்.

ஒரு நரெந்திரனை விவேகானந்தராக மாற்றவும், செருப்பு தைப்பவனுக்கு மகனாக பிறந்த ஆப்ரஹாம் லிங்கன் அமேரிக்காவின் ஜனாதிபதியாக மாற்றவும், மாசிடோனியாவின் மன்னனாக இருந்த அலெக்சாண்டர் உலகாளாச் செய்ததிற்கும், சீசர் ரோமை செல்வம் கொழிக்கச் செய்யும் பெரிய பேரரசாக மாற்றியதற்கும் என்ன காரணமாக இருக்கலாம்  ?

எதோ ஒரு உந்துதல் இருந்ததால் தான் இத்தனை பேர் சாதித்திருக்கிறார்கள்.

எறும்பு அதன் எடையை விட 8 மடங்கு அதிகமுள்ள எடை கொண்ட இனிப்பை தள்ளிக் கொண்டு போகுமாம். அசாதாரண எறும்பு 12 மடங்கு அதிக எடைகொண்ட இனிப்பை தள்ளும் ஆற்றல் உண்டு.

ஆர்வமும் அதற்கு துணையாக கடின உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

Saturday, October 13, 2012

திருவாசகம் - மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகரைப் போல யாருமே இறைவனைப் பற்றி இப்படி உருகி உருகி பாடியதாக வரலாறில்லை.  எல்லா நூல்களிலும் இல்லாத சிறப்பு இந்த திருவாசகத்திற்கு உண்டு. மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.

எல்லாப் பாடல்களிலும் அழுது கொண்டே பாடுகிறார். உருகுகிறார். ஏங்குகிறார். இறைவனிடம் எதையும் கேட்ட மாதிரி தெரியவில்லை. எல்லோரும் கோவிலுக்கு போனா எனக்கு அது கொடு இது கொடுன்னு கேக்குற மாதிரி இவர் எதையும் கேட்டதில்லை.

தன்னை இவ்வளவு தூரம் தாழ்த்தி, தனக்கு இறைவனை அடைய தகுதியில்லைனு இந்த பாட்டுல சொல்றாரு.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கி பொழுதினை
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

இப்படி உருகி உருகி அழுதழுது பாடிப்பாடி இவர் சிவனாகவே மாறிவிட்டார். அதனால் திருப்பெருந்துறை கோவிலில் சிவனுக்குப் பதில் மாணிக்கவாசகர் தான் கோவில் வலம் வருவார். மாணிக்கவாசகருக்குத்தான் பூஜை.

ஜி. யு. போப் இங்கிலாந்தில் இருந்து தனது கிருத்துவ மதத்தை பரப்புவதற்காக இந்தியா வந்திருந்தார். தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்து திருக்குறள்,  திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஒருமுறை தன் மதத்தை பரப்புவதற்குப் பதில் திருவாசகம் கற்றுக் கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்ட இவரை விசாரிக்க ஒருவரை அனுப்பினர் கிருத்துவ அமைப்பினர்.

வந்தவரை உட்காரவைத்து திருவாசகத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் ஜி யு போப். இவரை ஏன் என்று கேள்வி கேக்க வந்தவர் இங்கிலாந்திற்கு திரும்ப சென்று திருவாசகத்தை படித்து விட்டு இன்னும் இந்து மதத்திற்கு மாறாமல் இருக்கிறார் என்று பெருமைப் பட்டுக்கொள்ளுங்கள் என்றாராம்.

அவ்வளவு பெருமைக்குறியது மாணிக்கவாசகர் தந்த திருவாசகம்.

நான் யார் ?



இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான உணவை உட்கொள்ளும் போது ஏழு தாதுக்களான ரசம், ரத்தம், மஜ்ஜை, எலும்பு, கொழுப்புதசை, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து என்று இறையாற்றலாக மாறும் தன்மை கொண்ட இந்த உடம்பா நான் ? இல்லை.

ஐம்பொறிகளான பார்த்தல், கேட்டல், நுகர்தல், ருசித்தல், உணர்தல் என்ற உணர்ச்சிகளால்  ஆன ஒன்றா நான் ? இல்லை.

இந்த ஐம்பொறிகளைக் கொண்டுள்ள உடல் உறுப்புகளான கண், காது, நாக்கு, மூக்கு மற்றும் தோல்களால் ஆன ஒன்றா நான் ? இல்லை.

இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை நம் உடலின் கட்டமைப்பிற்கு தேவைகேற்ப சீரான முறையில் வெவ்வேறு விகிதங்களில் அமைந்துள்ள ஒன்றா நான் ? இல்லை.

பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்த சரீரம் இயங்குவதற்கும் வாழ்வதற்கும் தேவைப்படும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற ஐந்து வாயுக்களால் ஆனா ஒன்றா நான் ? இல்லை.

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் சேர்த்து வைத்து அவ்வப்போது நினைக்கின்ற மனசா நான் ? இல்லை.

இங்கு சொன்ன அனைத்துமே ஒன்றாக செர்ந்ததா நான் ? இல்லை.

அப்போ நான் யார் ?

இங்கு சொன்ன அனைத்திலிருந்தும் தனித்து இருப்பதும்,  இயற்கை எழில் கொஞ்சும் இவ்வுலகில் பிறந்ததில் இருந்து இன்று வரை கிடைத்தவற்றால் உணர்ந்ததும்
இந்த பிரபஞ்சத்தில் இருந்து கற்றுக் கொண்டதுமான அறிவுதான் நான்.


Sunday, October 7, 2012

பகுத்தறிவு

பகுத்தறிதல் என்றால் என்னனு தெரியாம மக்கள் எல்லாவற்றையும் போட்டு குழப்பிப் கொண்டிருக்கிற மாதிரி தோணுது.

யார் வேண்டுமானாலும் பகுத்தறிவாதியாகலாம் படிப்பதற்கும், சிந்திப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும் தயாராக இருந்தால்.

கடவுளை மற, மனிதனை நினை.
- பெரியார் சொன்னது.

மனிதனை நினை, மற்றதை யோசிக்க நேரம் இருக்காது.
- கமல்ஹாசன் சொன்னது.

மனிதனை நினை, உயிர்களை இணை.
- இப்படியும் சொல்லலாம்

ஒவ்வொருவர் சொன்ன கருத்துக்களையும் தனது அறிவால் சிந்தித்து, வேறு விதமான பார்வை கொண்டு அணுகி, தன் கருத்துக்களையும் பதித்து இந்த சமூகத்திற்கு நல்ல பயனளிக்கும் ஒரு மாற்றத்தை கொண்டுவரணும்.

எல்லோருமே பகுத்தறிவுவாதி ஆகலாம்.

Tuesday, October 2, 2012

ஹரிச்சந்த்ரா நாடகம்

காந்தி ஹரிச்சந்த்ரா நாடகம் பார்த்துவிட்டு பொய் பேசமாட்டேன் என முடிவு எடுத்தார். அதற்கு அப்புறம் எவ்வளவோ முறை நாடகம் நடந்திருக்கிறது, எத்தனையோ மக்கள் பார்த்திருக்கின்றனர். 

இன்றுவரை நாடகம் பார்த்த அனைவரும் பொய் பேசமாட்டேன்னு முடிவு எடுத்தா எப்படி இருக்கும்.

காந்தி - ஜீவானந்தம்

காந்தி வேதங்களில் சொன்னபடி வருண சாஸ்திரத்தை கடைபிடிக்கப் போவதாக ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஜீவானந்தம் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் "ஆங்கிலேயனிடம் இருந்து அடிமைப்பட்டு கிடந்த எங்களை மீண்டும் சாதி என்ற கொடூரனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று எழுதினார்.

கடிதம் காந்தியிடம் சேர்ந்த போது மாலை 5 மணி. காலை வரை தூக்கம் இழந்த நிலையில் மறுநாள் காந்தி ஜீவானந்ததிற்கு பதில் எழுதினார்.

அதில் "மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் எண்ணங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். உணர்வுகளை புரிந்து கொண்டேன். இனிமேல் சாதி ஒழிப்புக்கு நான் ஆதரவு தருவேன்" என்றார்.

பின் தமிழ் நாட்டிற்கு வந்த காந்தி மதுரையில் ஜீவானந்தத்தை சந்தித்து தனது வருத்தத்தையும், சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்ததையும் பதிவு செய்தார்.

என்னவோ போங்க, சாதி இன்னும் ஒழியவில்லை இங்கே.

நல்ல அம்மா

ஒரு குழந்தை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியது. உள்ளே வந்ததும் அம்மா குழந்தையிடம் இன்று என்ன கற்றுக் கொண்டாய் என்று கேட்கிறாள்.

அதற்கு குழந்தை பெரிய ஆளான பின் என்னவாகப் போறீங்கன்னு ஆசிரியர் கேட்டாங்க. அதுக்கு சிலர் மருத்துவராகனும், வக்கீலாகனும், பொறியிலாளராகனும்னு சொன்னாங்க.

அம்மா அதுக்கு நீ என்ன பதில் சொன்னாய் என்று கேட்டாள்

குழந்தை நான் குதிரையோட்டிகானும்னு சொன்னது.

அம்மா கோபப் படாமல் ஏன் அப்படிச் சொன்னாய் என்று கேட்டாள்.

அதற்கு குழந்தையோ தினமும் நான் அந்த மாமாவோட குதிரை வண்டியிலதான் பள்ளிக்கு போறேன். அந்த மாமா ரொம்ப நல்ல குதிரை ஓட்டுவாங்க என்றது. எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னது.

அம்மா உடனே உள்ளே சென்று தேரோட்டும் கிருஷ்ணர் படத்தை கொண்டுவந்து குழந்தையிடம் காமித்து உனக்கு குதிரையோட்டி ஆகனும்னா இந்த மாதிரி ஆகனும்னு சொன்னாள்.

அந்த குழந்தை தான் விவேகானந்தர்.

ஒரு குழந்தை என்னவாகனும்னு நினைக்கிறதோ அதன் வழியில் சென்று அவர்களுக்கு வழிகாட்டியா இருக்கனும்.

Monday, October 1, 2012

நட்பு

உங்கள் வீட்டில் நடக்கும் கல்யாண விசேஷத்தில் முக்கியமான பிரமுகர் வந்திருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் மணமக்களை வாழ்த்திவிட்டு அவசரமாக விடைபெறும் போது இருங்க சாப்பிட்டு விட்டு போங்க என்று பந்திக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.

ஆனால் பந்தியில் உட்கார இடமில்லை. இப்போது யாரை எழுப்பி அந்த பிரமுகரை உட்கார வைப்பீர்கள்?

சொந்தக்காரங்களை எழும்ப சொன்னால் பிரச்சனை வரும். இந்த நேரத்தில் உங்களால் எழுந்து இவருக்கு இடம் கொடு என்று சொல்லி எழுப்ப முடிந்த முடியும் ஒரே ஆள் உங்கள் நண்பன்.

ஏனென்றால் நட்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, மன வருத்தம் இல்லை, பழிவாங்கும் எண்ணம் இல்லை. நீங்கள் அந்த இடத்தில் உட்கார்ந்து இருந்தால் என்ன செய்வீர்களோ அதயே நண்பனிடம் பார்க்கிறீர்கள்.

கடவுளின் காமலீலை - பிரம்மன்

ஏன் இந்து புராணங்களில் கடவுளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று புரியவில்லை. எல்லாமே கதைதான் என்பதாலா ?

1. பார்வதியாரின் திருமணத்தில் திருவிரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து பின் சிவபூசையால் நீங்கினவர்.

2. இவர் அசுவமேத யாகம் செய்யும் போது அங்கிருந்த தேவ பத்தினிகளைக் கண்டு வீரியம் வெளிப்பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர், வசிட்டர் ஆகியோர் பிறந்தனர்.

3. திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக் கண்டு மயங்கி அவளை அடைய விரும்பிய போது அவள் நான்கு திக்கிலும் ஓடினாள். அத்திக்கிகளில் ஒவ்வொரு முகம் கொண்டு பார்த்தவர். அதனால் நான்முகன் என பெயர் பெற்றார்.

4. இவர் கெளரி தேவியின் திருமணம் காணச் சென்றார். அங்கே அவரது அழகில் மயங்கி காமமேலீட்டால் துன்புற்றார்.

(ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 1135,1136)