Thursday, March 21, 2013

பசுவும் பன்றியும்

பசு உயிருடன் இருக்கும் போது மனிதனுக்கு பால் தந்து உதவுகிறது. அதற்கு பிரதிபலனாக அதை பராமறிப்பதும் காலநேரம் பார்த்து உணவு அளிப்பதும் மனிதன் பார்த்துக் கொள்கிறான்.

பன்றி இறந்த பின் உணவாகவும், பின் அதன் தோலை சுத்தம் செய்து மனிதன் பயன் படுத்திக் கொள்கிறான்.

இங்கே இரண்டுமே மனிதனுக்கு பயன்பட்டாலும் உயிருடன் இருக்கும்போது உதவுகின்ற பசுவுக்கு கிடைக்கின்ற மரியாதை பன்றிக்கு கிடைப்பதில்லை.

ஆக வாழ்க்கையில் உயிருடன் இருக்கும் போதே பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

Wednesday, March 20, 2013

அகத்தாய்வு

ஒவ்வொரு மனிதனும் தன்னை அகத்தாய்வு செய்து மூன்றாவது மனிதனை கண்டுகொள்ள வேண்டும். யாரந்த மூன்றாவது மனிதன் ?

என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முதல் மனிதன், என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது இரண்டாவது மனிதன், நம் இருவருக்கு நடுவில் இருக்கும் மூன்றாவது மனிதனை ஒவ்வொருவரும் அடையாளன் கொண்டு வந்தால் இந்த நாட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.

தி மு க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு ஊர் திரும்பிய தென்மாவட்ட கட்சி தொண்டர்களின் வண்டி விபத்துக்குள்ளாகி சிலர் உயிருக்கு போராடினர். அதிகாலை என்பதால் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு வந்த சில இளைஞர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் உறவினருக்கும் சொல்லி அவர்கள் தங்க இடமும் உணவும் கொடுத்து குணமாகி மீண்டும் ஊருக்கு செல்லும் வரை பார்த்துக் கொண்டனர். விபத்தில் சிக்கியவர்கள் தி மு க வைச் சேர்ந்தவர்கள். அவர்களை காப்பாற்றியவர்கள் அ தி மு க வைச் சேர்ந்தவர்கள். கட்சி பெரிதல்ல மனிதம் தான் பெரியது என்று நினைத்ததால் இவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.

மதுரையில் இமாம் அலி ஹைதர் அலி என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் காவல் துறையினரை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். பைபாஸ் சாலை வழியாக ஓடும் அவர்களை காவல்துறையினர் பின்னால் துரத்திக் கொண்டு வந்தனர். இப்படி துரத்தும் வேளையில் பக்கத்தில் இருந்த பள்ளிக் கூடத்திலிருந்து குழந்தைகள் வெளியே வர அதில் இரு குழந்தைகள் தவறி கீழே விழுந்து விட்டனர். ஓடிக் கொண்டிருந்த தீவிரவாதி இரு குழந்தைகளையும் தூக்கி சாலையின் ஓரமாக விட்டுவிட்டு மீண்டும் ஓடத் தொடங்கினர்.

ஒரு வயதான பாட்டி உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டார். பக்கத்து வீட்டிலிருந்தவர் ஆட்டோவை அழைத்து வரச் சென்றார். நடுராத்திரி என்பதால் 30 ரூபாய் வாங்க வேண்டிய சவாரிக்கு 250 ரூபாய் கேட்டான் அந்த ஆட்டோ ஓட்டுனர். வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டு அழைத்து வந்தார். பாட்டியை தூக்கி ஆட்டோவில் வைக்க உதவினான் ஆட்டோ ஓட்டுனர். மருத்துவமனைக்கு சென்று ஆட்டோவிலிருந்து தூக்கி உள்ளே அழைத்துச் செல்லவும் உதவினான். இப்போ பைசா கொடுத்த போது வாங்க மறுத்தவனாய் இது பாட்டிக்கு செய்த உதவியாக இருக்கட்டும் என்றான் அவன். அதிக பணம் கேட்டது முதல் மனிதன். மூன்றாம் மனிதன் விழித்துக் கொண்டது மருத்துவமனையில் (தென்கச்சி சுவாமி நாதன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி).

மனசு


மனசை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

அதனால் மனசை அடக்க முயற்சிப்பது அதனோடு போராடுவதேல்லாம் முடியாத காரியம். ஒருவன் மனசை அடக்குவேன் என்று மரத்தடியில் உட்கார்ந்து தவம் பண்ணினான். தினமும் காலை 8 மணிக்கு அந்த வழியாக நடனம் கற்றுக்கொள்ளும் ஒரு பெண் கடந்து செல்வது வழக்கம். முதல் நாள் இவன் தவம் இருக்கும் போது இந்தப் பெண் கடந்து செல்வதை கண்டான். ஆஹா மனசை கட்டுப்படுத்தலாம்னு இங்க வந்தா இவள் நடந்து போறத பார்க்கிறோமே என்று ஒரு துணியை எடுத்து கண்ணைக் கட்டிக்கொண்டான். மறுநாள் அந்த பெண் நடந்து வர அவளின் கொலுசு சத்தம் இவன் காதில் விழுந்தது. இவனோ ஒரு துணியை எடுத்து காதை பொத்திக் கொண்டான். மறுநாள் அவள் தலையில் அணிந்திருந்த மல்லிகைப்பூ மனத்தை மூக்கு நுகர்ந்தது. உடனே இவன் இன்னொரு துணியை எடுத்து மூக்கையும் அடைத்துக் கொண்டான். இனிமேல் மனசை சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்று யோசித்தவனாக தவத்தை தொடர்ந்தான். மறுநாள் 8 மணியானதும் இந்நேரம் அவள் நடந்து போயிருப்பாள் என்று இவன் மனம் யோசிக்க ஆரம்பித்ததாம்.

அதனால் மனசை கட்டுப்படுத்த முடியாது. ஒன்று அதை விட்டு விலகி வரணும். இல்லை அதைப் பற்றி அறிய முற்படனும்.

Tuesday, March 19, 2013

கொலை - தற்கொலை



பாரதப் போரில் கர்ணன் கை ஓங்க தருமரை ஓட ஓட விரட்டினான். தன் முகாமிற்கு திரும்பி வந்த தர்மர் மிகுந்த கோபத்துடன் தூதுவனை அழைத்து அர்ஜுனனிடம் சென்று எப்படியாவது கர்ணனை கொன்று விட்டு வருமாறு சொல் என்றார். ஆனால் கர்ணனை கொல்ல அம்பு தொடுத்த அர்ஜுனன் என்னால் கர்ணனை கொல்ல முடியவில்லை, கர்ணனின் முகம் என் அண்ணன் தர்மர் போல் தோன்றுகிறது, அவன் தோள் என் அண்ணன் பீமன் போல் இருக்கிறது, அவன் பாதங்கள் என் தாயின் பாதங்களைப் போல் இருக்கிறது என்று முகாமிற்கு திரும்புமாறு கிருஷ்ணனுக்கு ஆணையிட்டான்.

கர்ணனை கொல்லாமல் முகாமிற்கு வந்த அர்ஜுனனை கண்டு தர்மர் மிகவும் கொதித்துப் போய் அர்ஜுனனின் வில்லையும் அம்பையும் இழித்து ஏளனமாக பேசினார். தன் வில்லையும் அம்பையும் ஏளனமாய் யார் பேசினாலும் கொள்வேன் என்று அர்ஜுனன் ஏற்கனவே சத்தியம் செய்திருந்தான். அதனால் கோபமுற்ற அர்ஜுனன் தருமரை நோக்கி உங்களை கொள்வேன் அப்படியே நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்தான். வில்லை எடுத்து அம்பு தொடுக்க ஆயத்தமானான். அப்போது கிருஷ்ணன் இடையில் புகுந்து, கர்ணன் உன் அண்ணனைப் போல் தோன்றுவதால் அவனை கொல்ல மனமில்லை என்று சொல்லிவிட்டு இங்கே வந்தாய். இப்போ உன் அண்ணனையே கொல்ல துணிந்து விட்டாயே எனக்கேட்டான். அதற்கு அர்ஜுனன் நான் சத்தியம் செய்துவிட்டேன். அதனால் கண்டிப்பாக என் அண்ணனை கொலை செய்ய வேண்டும், அவரும் இறந்து விடுவார், பின் அண்ணனை பரிந்து நானும் உயிரோட இருக்க மாட்டேன் தற்கொலை செய்து கொள்வேன் என்றான்.

அதற்கு கிருஷ்ணன், உன் அண்ணனை கொலை செய்ய வேண்டும் ஆனால் அவர் உயிருடன் இருக்க வேண்டும் அவ்வளவு தானே! நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன் கேட்பாயா என்றான். அர்ஜுனனும் சம்மதித்தான். உன் அண்ணனை நீ வா போ என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசு, அப்படி பேசினால் கொலை செய்வதற்கு சமம் என்றான். அர்ஜுனனும் அப்படி பேசினான். கொலை செய்வேன் என்று சொன்ன சத்தியத்தை காப்பாற்றி விட்டோம் என சந்தோசப் பட்டான் அர்ஜுனன். இப்போ தற்கொலை செய்வேன் என்று சபதம் எடுத்தேனே அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன்னையே நீ உயர்வாகவும் தற்பெருமையாகவும் பேசு. அது தற்கொலைக்கு சமம் என்றான். அர்ஜுனனும் என் வில்லைவித்தைக்கு இணை யாரும் இல்லை. நான் பெரியவன், என்னை நம்பி தான் இந்த பாராத போர் நடக்கிறது என்று பெருமையாக பேசிக் கொண்டான்.

இவ்வாறு நீ வா போ என்று பேசினால் கொலைக்கு சமம் என்றும் தற்பெருமையாக பேசினால் தற்கொலைக்கு சமம் என்றும் விளக்கம் அழித்தான் கிருஷ்ணன்.

அரிய குணம் - டால்ஸ்டாய் - அஷுடோஷ் முகர்ஜி

டால்ஸ்டாய் (Tolstoy) உலகப்புகழ் பெற்ற மிக அருமையான எழுத்தாளர். சிந்தனையாளர்.  இவரின் "போரும் சமாதானமும்" மிகவும் புகழ் பெற்றது. இவரிடம் மிகவும் அரிதான குணாதிசயம் இருந்தது.  இவர் தன் எழுத்தினால் பெறும் வருமானம் போதாது என்பதால் வேறு உடல் உழைப்பு செய்து சம்பாதிப்பார்.

ஒருமுறை டால்ஸ்டாய் ரயில் நிலையத்திற்கு ஒரு வேலையாக வந்திருந்தார். அப்போது ஒரு பெண் இவரிடம் தன் கணவர் தண்ணீர் எடுக்க கீழே இறங்கியதாகவும் இன்னும் வரவில்லை என்றும் கண்டுபிடித்து கொடுத்தால் பணம் தருவதாகவும் சொன்னாள். இவரும் அலைந்து திரிந்து அவள் கணவரை கண்டுபிடித்து அவளிடம் சேர்த்தார். அவள் சொன்னபடி பணம் நீட்ட இவரும் வாங்கிக் கொண்டு கிளம்பினார். அப்போது நிலையத்தில் இருந்த ஊழியர் அந்த பெண்ணைப் பார்த்து இவர் யாரென கூற உடனே அந்தப் பெண் ரயிலிலிருந்து கீழிறங்கி மன்னிப்பு கேட்டாள். அதற்கு டால்ஸ்டாய் கொடுத்த பணத்தை திரும்ப கேட்காதே. ஏன்னா அது என் உடலுழைப்பால் சம்பாதித்தது. தரமாட்டேன் என்றார். தன் கௌரவத்தை பற்றி கவலைப்படாமல் எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்தார். 

கொல்கொத்தாவில் பிறந்து வளர்ந்த அஷுடோஷ் முகர்ஜி (Ashutosh Mukherjee) என்பவர் ஒரு பிராமணர். தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் காலை 4 மணிக்கே எழுந்து கங்கை நதியில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் வீடுவரை நடந்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். 

ஒரு நாள் அவர் நீராடிவிட்டு திரும்பி வரும்போது வயதான பாட்டி சிறப்பு பூஜை செய்துவிட்டு ஒரு ஏதும் இல்லாத ஏழை பிராமணன் ஒருவனுக்கு தானம் பண்ணவேண்டும் என்று காத்திருந்தாள். அந்த நேரம் இவர் அங்கு வர தானம் வாங்கிச் செல்லுமாறு கேட்டாள். நீதிபதியும் அதன்படியே தானம் வாங்கிவிட்டு செல்லும்போது அவரை பற்றி அருகில் இருந்தவர்கள் இவர் தலைமை நீதிபதி இவருக்கு போய் தானம் செய்தாயே என்று கூறினர்.

பாட்டி மன்னிப்பு கூறினாலும் நீதிபதியோ உனக்கு வேண்டியது தானம் பண்ணவேண்டும். பண்ணினாய், நானும் வாங்கிக்கொண்டேன். திரும்ப கேட்க கூடாது என்றார்.

இருவேறு கால கட்டத்தில் வேவ்வேறு இடங்களில் வாழ்ந்த இந்த இருவரின் செயலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இது அரிய குணங்களில் ஒன்று.

Tuesday, March 12, 2013

கிருஷ்ணன் - அஸ்தினாபுரம்


பாண்டவர்களுக்கு நாட்டை திரும்ப தரவேண்டும் என்று துரியோதனனிடம் தூது செல்ல கிருஷ்ணன் அஸ்தினாபுரத்திற்கு வந்தான். நாட்டின் எல்லையிலேயே தேரை நிறுத்தி விட்டு நடந்து உள்ளே வருகிறான். ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டே எந்த வீட்டில் தங்கலாம் என்று யோசித்துக் கொண்டே வருகிறான்.

வழியில் ஓவ்வொருவரும் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு அழைக்கின்றனர்.

துரோணர் கிருஷ்ணனை பார்த்து "வா கிருஷ்ணா வா, இது என் வீடு. இங்கே வந்து தங்கலாம்" என்று அழைக்கிறார். பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவர் வீட்டைக் கடந்து சென்றவனை பீஷ்மர் நிறுத்தி "கிருஷ்ணா, இது என் வீடு. நீ இங்கே உன் வேலை முடியும் வரை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்" என்று அழைக்கிறார். இவர் வீட்டிற்கும் செல்லாமல் மீண்டும் நடந்தவனை கிருபாச்சாரியார் "கிருஷ்ணா, இது என் வீடு. பதவியில் அமர்ந்தவுடன் கட்டிய வீடு.  இங்கே வந்து தங்கலாம்" என்று அழைக்கிறார்.

யார் வீட்டிற்கும் செல்லாமல் மீண்டும் நடக்க ஒரு குடிசை போன்ற அமைப்புள்ள வீட்டை அணுகினான். அங்கேயிருந்த விதுரர் வந்து "கிருஷ்ணா, இது உன் வீடு. நீ இங்கே தங்கலாம்" என்றார்.

உடனே கிருஷ்ணன் அஸ்தினா புரத்தில் எனக்கு ஒருபிடி நிலமோ வீடோ தங்குவதற்கு இல்லையே என்று நினைத்தேன். இதோ என் வீடு. என் வீடு இருக்க, வேறு ஒருவர் வீட்டில் தங்குவது நல்லதல்ல என்று சொல்லி விதுரர் வீட்டில் கிருஷ்ணன் தங்கினான்.

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்



காட்டில் வாழும் பாண்டவர்கள் நிறைய சோதனைகளை சந்தித்தனர்.

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும். போய் சொன்னால் நம் உறவுகள் விலகும், அதே உண்மை சொல்ல உறவினர்கள் நம்மோடு சேர்வார்கள்.

காட்டில் அமித்ர முனிவரின் ஆசிரமத்தில் ஒரு நெல்லி மரம் உண்டு. அதில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு நெல்லிக்காய் உருவாகும். அங்கே வந்த பாஞ்சாலியும் அர்ஜுனனும் அந்த நெல்லிக்கனியை பறிக்க அதைக்கண்ட முனிவரின் சீடர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் தவமிருந்த பின் இந்த கனியை அமித்ர முனிவர் உண்பார். வேறு எந்த உணவும் உண்ண மாட்டார். இப்படி தவறு இளைத்து விட்டீர்களே என்று கூறினர்.

உடனே தர்மர் உள்பட எல்லோரும் அங்கே வர கிருஷ்ணனை அழைத்து உதவி கேக்கலாம்னு என்று முடிவாகி தர்மன் கிருஷ்ணனை அழைத்தான். கிருஷ்ணன் வந்து மரத்தில் இருந்து பறித்த நெல்லிக்காய் மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க ஒரே வழிதான் உண்டு. அது நீங்க ஆறு பேரும் தங்கள் மனதில் உள்ளதை உள்ளபடியாக சொல்லும் போது இந்த நெல்லிக்காய் தானாகவே ஒட்டிக்கொள்ளும் என்றான்.

ஒவ்வொருவராக தங்கள் மனதில் உள்ளதை சொல்ல ஆரம்பித்தனர்.

தர்மர் : எனக்கு பாரதப் போரில் வெல்ல வேண்டும் என ஆசையில்லை. என் லட்சியம் அற வழியில் செல்ல வேண்டும், தர்மம் காப்பாற்றப் பட வேண்டும். சத்தியம் ஜெயிக்கணும். இதை தவிர வேறொன்றும் இல்லை என்றான்.

அர்ஜுனன் : எனக்கு புகழ் பைத்தியம் உண்டு. ஆசை உண்டு. யாராவது என்னை புகழ வேண்டும் என்று நினைப்பேன்.

பீமன் : பிறர் பொருளுக்கு ஆசை கொண்டவன் இல்லை. பிறர் மனைவி பற்றி நினைத்து இல்லை. அவர்களை பெற்ற தாய் போல் எண்ணுவேன். பிறர் கஷ்டம் என் கஷ்டம் போல் எண்ணுவேன்.

நகுலன் : கல்வி, ஞானம், அறிவு இல்லாத படிக்காத மக்களிடம் நான் மரியாதை காட்டுவதில்லை. அவர்கள் மனமில்லாத மலர் போன்றவர்கள்.

சகாதேவன் : தர்மம் எனக்கு சகோதரன். ஞானம் தான் அப்பா. கருணை என் தோழன். சாந்தம் தான் மனைவி. எலும்பு தோலும் ஆன இந்த உறவில் நம்பிக்கை இல்லை.

திரௌபதி : இந்த ஐந்து பொறிகள் போல, ஐந்து புலன்கள் போல ஐந்து பேரை கணவனாக அமைந்திருந்தும் வேறு ஒருவன் என் கணவனாகவில்லையே என் மனம் விரும்பும்.

ஆழ்மனதில் இருந்து உண்மையை சொன்னால் எல்லா கஷ்டமும் நீங்கும். அது போல ஆறு பேரும் சொன்னவுடன் நெல்லிக்காய் மரத்தோடு ஒட்டிக் கொண்டது.


அர்ஜுனன் - விராட பருவம்


காட்டில் இருக்கும் அர்ஜுனனை அவனது தந்தை இந்திரன் தன்னுடன் வந்து இந்திரலோகத்தில் சிலகாலம் தங்குமாறு வேண்டினான். அதற்கு சம்மதித்து இந்திரலோகம் சென்றான். அங்கே ஊர்வசி வந்து நடனமாட அர்ஜுனன் கண்டு மகிழ்ந்தான்.

இதைக்கண்ட இந்திரன் ஊர்வசியை அழைத்து அர்ஜுனன் அறைக்கு சென்று அவனை சந்தோசப்படுத்துமாறு சொல்ல, ஊர்வசியும் சென்றாள். அப்போது அர்ஜுனன் ஊர்வசியை பார்த்து என்ன என்று கேட்க உன் தந்தை தான் என்னை இங்கே அனுப்பி உன்னை சந்தோசப் படுத்த சொன்னார் என்றாள்.

அதற்கு அர்ஜுனன் என் தந்தை உன்னை விரும்பியதால் நீ எனக்கு தாய் முறை வேண்டும், அதனால் நீ இங்கிருந்து செல்லலாம் என்றான். அதற்கு ஊர்வசி உன் தந்தை சொன்னார் என்பதற்காக மட்டும் இல்லை நானும் உன்மேல் ஆசை கொண்டேன் அதனால் ஏற்றுக்கொள் என்று சொன்னாள். மீண்டும் மறுத்தான் அர்ஜுனன். கோபம் கொண்டவளாக அர்ஜுனனைப் பார்த்து என் அழகைக் கண்டு மயங்காமல் என்னோடு உறவு கொள்ளாமல் பேடி போல் நின்றதால் நீ பேடியாக போவாய் என்று சாபமிட்டாள்

இதை கேள்விப்பட்ட இந்திரன் மிகவும் வருந்தி என்னால் இந்த சாபத்தை நீக்க முடியாது. ஆனால் மாற்றி அமைக்க முடியும் என்று சொல்லி நீ பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்த பின் ஒரு ஆண்டு மறைமுக வாசம் இருக்கும்போது இந்த பேடி வேஷம் கொண்டு சாபத்தை கழிப்பாயாக என்றான் இந்திரன்.