Monday, May 13, 2013

மரணம்

மரணம் என்பது ஒரு நிகழ்வு அல்லது சம்பவம். அதைக்கண்டு வருத்தப் படுவதும் வேதனைப் படுவதும் மனிதனின் இயல்பு. ஆனால் அந்த இடத்திலேயே தங்கிவிட முடியாது. எல்லோருக்கும் இந்த சம்பவம் என்றாவது ஒரு நாள் நிகழும். 

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கே. அதனால் எது நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்னு நம்புங்க இல்லை உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள்.

புத்தன் இதைப் பற்றி சொல்லும் போது நாம் பிறந்த நாளிலிருந்து இன்று வரை எவற்றை சேர்த்தோமோ அவைகள் மரணத்தில் பிரிந்து செல்லும். அதாவது நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று மற்றும் நெருப்பு என்பவற்றை சேர்த்தோம். மரணம் என்ற சம்பவம் நிகழ்ந்த பின் நெருப்பிட்டு எரியூட்ட மண்ணோடு சேர நீருற்றி அணைக்க காற்றோடு கலந்து விடுகிறது.

இந்து மதத்தில் ஐந்தாவதாக ஆகாயம் சேர்க்கப் பட்டிருக்கிறது. நிருபிக்கப் படாத எதையிம் புத்தன் சேர்க்க விரும்பவில்லை.

முக்தி

புத்தர் ஒரு கிராமத்தில் பேசும்போது கூட்டத்திலிருந்து மக்களை நோக்கி முக்தி பெறுவது சுலபம் என்றார். இதைக் கேட்ட ஒருவன் எந்த அளவு சுலபம் எனக்கேட்க அதற்கு புத்தர் வானில் இருந்த நிலாவைக் காட்டி இப்படி நிலாவைப் பார்ப்பதை விட சுலபம் என்றார். அவன் எப்படி என்று கேட்க பிறகு பதில் சொல்கிறேன் என்றார்.

கூட்டம் முடிந்தது. கேள்வி கேட்டவனை அழைத்து இந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு எழுதிவிட்டு நாளைய கூட்டத்திற்கு வந்து சொல் என்றார்

அவனும் மறுநாள் வந்து ஒவ்வொருவரும் என்ன வேண்டும் என்று கூறியதை புத்தரிடம் சொன்னான். புத்தன் அவனைப் பார்த்து யாராவது முக்தியடைய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா எனக்கேட்டார்.

அதில் ஒருவரும் முக்தி அடைய வேண்டும் என்று கேட்கவில்லை என்றான். இப்போது புரிகிறதா? முக்தியடைவது வெகு சுலபம். ஆனால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள் என்றார்.

Sunday, May 12, 2013

ஆசையே துன்பத்திற்கு காரணம்

ஆசையே துன்பத்திற்கு காரணம். அப்படி என்றால் அதே ஆசை தான் இன்பத்திற்கும் காரணம். இப்போ ஆசைப்படக்கூடாதா இல்லை ஆசைப்படலாமா ?

பெரிய கேள்வி இது. ஆனால் இதனுள் இருக்கும் கருத்தைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

எந்த துன்பமும் சில நொடிகளில் இன்பமாக மாற வாய்ப்புண்டு. அதே நேரத்தில் எந்த இன்பமும் சில நொடிகளில் இன்பமாக மாறும்.

சிக்கலான மகப்பேறு மனைவிக்கு ஏற்பட்டால் துன்பம், கஷ்டம் என்கிறோம். அதே விசயம் குழந்தை பிறந்து இருவரும் நலம் என்று வரும் போது இன்பமாக மாறுகிறது.

நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயலை செய்யும் போதும் இன்பத்தை நோக்கியே பயணிக்கிறோம். அதே செயலால் துன்பம் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். 

புத்தன் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம், அது நம் எண்ணங்களில் இருந்து உருவாகிறது, இந்த எண்ணங்கள் நம் மனதின் வெளிப்பாடு, மனம் எப்போதும் எண்ணங்களை வைத்துக் கொண்டேயிருக்கும் என்று உணர்ந்தார். மனதைக் கட்டுப்படுத்தவது முடியாத காரியம். அதனால் அந்த மனதிலிருந்து விலகி இருங்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.

Saturday, May 11, 2013

புத்தன் சொன்னது

இன்று புத்தன் சொன்ன விசயங்களை கருத்துக்களை அவருக்கு முன் யாரோ சொன்னது என்றும், புத்தனுக்கு இந்த மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கேள்வி கேட்கின்றனர்.

அவர்கள் முன் வைத்தது சித்தர்களும், ஆழ்வார்களும் இன்னும் பல ஞாநிகளும் என்று.

புத்தன் வாழ்ந்த காலம் கி மு 500. அதன் பின்னே தான் இவர்கள் சொன்ன அத்தனை பேரின் காலமும் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லாருமே கிறிஸ்து பிறந்த காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்கள்.


என்ன சொல்வது இவர்களிடம் ?