Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Tuesday, October 2, 2012

நல்ல அம்மா

ஒரு குழந்தை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியது. உள்ளே வந்ததும் அம்மா குழந்தையிடம் இன்று என்ன கற்றுக் கொண்டாய் என்று கேட்கிறாள்.

அதற்கு குழந்தை பெரிய ஆளான பின் என்னவாகப் போறீங்கன்னு ஆசிரியர் கேட்டாங்க. அதுக்கு சிலர் மருத்துவராகனும், வக்கீலாகனும், பொறியிலாளராகனும்னு சொன்னாங்க.

அம்மா அதுக்கு நீ என்ன பதில் சொன்னாய் என்று கேட்டாள்

குழந்தை நான் குதிரையோட்டிகானும்னு சொன்னது.

அம்மா கோபப் படாமல் ஏன் அப்படிச் சொன்னாய் என்று கேட்டாள்.

அதற்கு குழந்தையோ தினமும் நான் அந்த மாமாவோட குதிரை வண்டியிலதான் பள்ளிக்கு போறேன். அந்த மாமா ரொம்ப நல்ல குதிரை ஓட்டுவாங்க என்றது. எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னது.

அம்மா உடனே உள்ளே சென்று தேரோட்டும் கிருஷ்ணர் படத்தை கொண்டுவந்து குழந்தையிடம் காமித்து உனக்கு குதிரையோட்டி ஆகனும்னா இந்த மாதிரி ஆகனும்னு சொன்னாள்.

அந்த குழந்தை தான் விவேகானந்தர்.

ஒரு குழந்தை என்னவாகனும்னு நினைக்கிறதோ அதன் வழியில் சென்று அவர்களுக்கு வழிகாட்டியா இருக்கனும்.

Thursday, September 27, 2012

குழந்தைகள்


தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு பாலுட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்தது மட்டுமில்லாமல் அவர்கள் கடைபிடிக்கும் சாதி மத எண்ணங்களையும் தன் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள்.

கோவிலுக்கு போ சாமி கும்பிடு என்றெல்லாம் சொல்கிறார்கள்.

அந்த குழந்தை என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.

பெற்றோர்களே இன்றுவரை சாதி, மதம், கடவுளை சரியாக தழுவவில்லை. பெற்றோர்கள் உண்மையாகவே தழுவியிருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியதில்லை.

அவர்கள் பெற்றோர்களை பார்த்து தானாக கற்றுக் கொள்வார்கள்.மொழியை கற்றுக் கொள்கிறார்கள். பேச கற்றுக் கொள்கிறார்கள்.