Monday, May 13, 2013

மரணம்

மரணம் என்பது ஒரு நிகழ்வு அல்லது சம்பவம். அதைக்கண்டு வருத்தப் படுவதும் வேதனைப் படுவதும் மனிதனின் இயல்பு. ஆனால் அந்த இடத்திலேயே தங்கிவிட முடியாது. எல்லோருக்கும் இந்த சம்பவம் என்றாவது ஒரு நாள் நிகழும். 

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கே. அதனால் எது நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்னு நம்புங்க இல்லை உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள்.

புத்தன் இதைப் பற்றி சொல்லும் போது நாம் பிறந்த நாளிலிருந்து இன்று வரை எவற்றை சேர்த்தோமோ அவைகள் மரணத்தில் பிரிந்து செல்லும். அதாவது நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று மற்றும் நெருப்பு என்பவற்றை சேர்த்தோம். மரணம் என்ற சம்பவம் நிகழ்ந்த பின் நெருப்பிட்டு எரியூட்ட மண்ணோடு சேர நீருற்றி அணைக்க காற்றோடு கலந்து விடுகிறது.

இந்து மதத்தில் ஐந்தாவதாக ஆகாயம் சேர்க்கப் பட்டிருக்கிறது. நிருபிக்கப் படாத எதையிம் புத்தன் சேர்க்க விரும்பவில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.