Monday, May 13, 2013

முக்தி

புத்தர் ஒரு கிராமத்தில் பேசும்போது கூட்டத்திலிருந்து மக்களை நோக்கி முக்தி பெறுவது சுலபம் என்றார். இதைக் கேட்ட ஒருவன் எந்த அளவு சுலபம் எனக்கேட்க அதற்கு புத்தர் வானில் இருந்த நிலாவைக் காட்டி இப்படி நிலாவைப் பார்ப்பதை விட சுலபம் என்றார். அவன் எப்படி என்று கேட்க பிறகு பதில் சொல்கிறேன் என்றார்.

கூட்டம் முடிந்தது. கேள்வி கேட்டவனை அழைத்து இந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு எழுதிவிட்டு நாளைய கூட்டத்திற்கு வந்து சொல் என்றார்

அவனும் மறுநாள் வந்து ஒவ்வொருவரும் என்ன வேண்டும் என்று கூறியதை புத்தரிடம் சொன்னான். புத்தன் அவனைப் பார்த்து யாராவது முக்தியடைய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா எனக்கேட்டார்.

அதில் ஒருவரும் முக்தி அடைய வேண்டும் என்று கேட்கவில்லை என்றான். இப்போது புரிகிறதா? முக்தியடைவது வெகு சுலபம். ஆனால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.