Showing posts with label ஜீவானந்தம். Show all posts
Showing posts with label ஜீவானந்தம். Show all posts

Tuesday, October 2, 2012

காந்தி - ஜீவானந்தம்

காந்தி வேதங்களில் சொன்னபடி வருண சாஸ்திரத்தை கடைபிடிக்கப் போவதாக ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஜீவானந்தம் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் "ஆங்கிலேயனிடம் இருந்து அடிமைப்பட்டு கிடந்த எங்களை மீண்டும் சாதி என்ற கொடூரனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று எழுதினார்.

கடிதம் காந்தியிடம் சேர்ந்த போது மாலை 5 மணி. காலை வரை தூக்கம் இழந்த நிலையில் மறுநாள் காந்தி ஜீவானந்ததிற்கு பதில் எழுதினார்.

அதில் "மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் எண்ணங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். உணர்வுகளை புரிந்து கொண்டேன். இனிமேல் சாதி ஒழிப்புக்கு நான் ஆதரவு தருவேன்" என்றார்.

பின் தமிழ் நாட்டிற்கு வந்த காந்தி மதுரையில் ஜீவானந்தத்தை சந்தித்து தனது வருத்தத்தையும், சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்ததையும் பதிவு செய்தார்.

என்னவோ போங்க, சாதி இன்னும் ஒழியவில்லை இங்கே.