சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
கொடை, தயை, ஈகை
மூன்றும் குடிப்பழக்கம்
சித்திரங்கள் வரைய வரையத்தான் பழக்கத்திற்கு வரும்.
தமிழ் பேசப் பேசத்தான் நமக்கு பழக்கமாகும்
கற்கும் போது மனதால் உணர்ந்து அனுபவித்து கற்கும் பழக்கம் வேண்டும்
ஒழுக்கமாக இருக்க பழக வேண்டும்.
இந்த உலகிலேயே கொடை, தயை, ஈகை மூன்றும் தான் வழிவழியாக வரனும்.
கொடை என்பது என்ன இருந்தாலும் கொடுப்பது. பாரி முல்லைக்கு தேர் கொடுத்தது போல்.
தயை என்பது எல்லா உயிரிடத்திலும் அன்பாக இருப்பது.
ஈகை என்பது எதையும் எதிர்பாரமல் கொடுப்பது.