Showing posts with label குரு கோவிந்த் சிங். Show all posts
Showing posts with label குரு கோவிந்த் சிங். Show all posts

Thursday, September 13, 2012

குரு கோவிந்த் சிங் - சீடர்கள்

சீக்கிய மதத்தில் வந்த குரு கோவிந்த் சிங் தனது சீடர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஒர் நாள் தன் எதிரில் இருக்கும் அத்தனை சீடர்களையும் பார்த்து சொன்னார் "நான் ஒரு நரபலி கொடுத்து ஒரு காரியத்தை செய்ய வேண்டியிருக்கிறது. உங்களில் யார் அந்த நரபலிக்கு தயாராக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

முதலில் ஒரு சீடன் எழுந்து அவர் முன் வந்து நான் தயார் என்றான். அவனை உள்ளே அழைத்து சென்றார். வெளியே வரும்போது கையில் கத்தியும் அதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்து சொன்னார் "இன்னொரு நரபலியும் கொடுக்க வேண்டும் யார் வருகிறீர்கள்" எனக் கேட்டார். உடனே இன்னொரு சீடனும் எழுந்து வந்தான். இப்படி 5 சீடர்களையும் அவர் உள்ளே அழைத்து சென்றுவிட்டு வெளியே வரும்போது கத்தியோடு வந்தார்.

ஆனால் அவர் நரபலி கொடுத்தது ஒரு ஆடு. பின் அந்த 5 சீடர்களையும் பார்த்து சொன்னார் "உங்களையே பலிகொடுக்க நீங்கள் தயாராகிவிட்ட நீங்கள் தான் இந்த மதத்தை கொண்டு செல்ல சரியான சீடர்கள்".