ஏன் இந்து புராணங்களில் கடவுளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று புரியவில்லை. எல்லாமே கதைதான் என்பதாலா ?
1. பார்வதியாரின் திருமணத்தில் திருவிரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து பின் சிவபூசையால் நீங்கினவர்.
2. இவர் அசுவமேத யாகம் செய்யும் போது அங்கிருந்த தேவ பத்தினிகளைக் கண்டு வீரியம் வெளிப்பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர், வசிட்டர் ஆகியோர் பிறந்தனர்.
3. திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக் கண்டு மயங்கி அவளை அடைய விரும்பிய போது அவள் நான்கு திக்கிலும் ஓடினாள். அத்திக்கிகளில் ஒவ்வொரு முகம் கொண்டு பார்த்தவர். அதனால் நான்முகன் என பெயர் பெற்றார்.
4. இவர் கெளரி தேவியின் திருமணம் காணச் சென்றார். அங்கே அவரது அழகில் மயங்கி காமமேலீட்டால் துன்புற்றார்.
(ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 1135,1136)